சென்னை அசோக் நகரில் உள்ள தனது வீட்டை google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விற்று விட்டார் வீட்டை விட்ட போது சுந்தர் பிச்சையின் தந்தை மனமடைந்து கண்கலங்கியதாக கூறப்படுகிறது சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் சுந்தர் பிச்சையை வளர்த்து வந்துள்ளனர் அந்த வீடு சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாதர் பிச்சை வாங்கிய முதல் சொத்தாகும் தனது 20 வயது வரை சுந்தர் பிச்சை அசோக் நகர் வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது அதன்பிறகு கரக்பூர் ஐஐடியில் படித்துவிட்டு சுந்தர் பிச்சை அமெரிக்கா சென்று விட்டார் சில மாதங்களுக்கு முன்பு அசோக் நகர் வீட்டை விற்பனை செய்ய ரெகுநாதர் பிச்சை முடிவெடுத்த நிலையில் இது தொடர்பான தகவல் பட தயாரிப்பாளர் சி மணிகண்டனுக்கு தெரிய வந்துள்ளது வீட்டை வாங்க முடிவு செய்த மணிகண்டன் ரெகுநாத் பிச்சையிடம் பேசியுள்ளார் பிச்சை அமெரிக்காவில் இருந்ததால் வீட்டை வாங்க நான்கு மாதங்கள் ஆகி உள்ளன வீட்டை வாங்கிய பிறகு ஆவணங்களை மணிகண்டனிடம் ஒப்படைத்த போது ரெகுநாதர் பிச்சை கண்கலங்கி இருக்கிறார்