Headlines
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்(!)

இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்(!)

 


"மினி கோவா" என சுற்றுலாப் பயணிகளால் அன்புடன் அழைக்கப்படும் புதுச்சேரி இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். புதுவை அருகிலேயே அமைந்திருக்கும் உலகத்தர சிட்டியான ஆரோவில் புதுச்சேரி சுற்றுலாவின் மணிமகுடம் போல இருக்கிறது. வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. நாம் ஹோட்டல் புக்கிங் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தும் போர்டலான (Booking.com) தனது (11)வது வருடாந்திர டிராவலர் ரிவியூ விருதுகள் 2023 இல் பாண்டிச்சேரியை 'இந்தியாவில் அதிகம் வரவேற்கும் பகுதி' The most welcoming region என்று பெயரிட்டுள்ளது. இந்தியாவில் எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருந்தும் புதுச்சேரி இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது




அனைத்து தரப்பினருக்குமான சுற்றுலாத்தலம் இது

பாரம்பரியத்தை விரும்புபவர்களுக்கு பிரஞ்சுக் கால கட்டிடங்கள் மற்றும் தேவாலயங்கள், யாத்ரீகர்களுக்கு மணக்குள விநாயகர் கோவில்,  உட்பட பல கோவில்கள், இளசுகளுக்கு துடிப்பான பல பப்கள் பார் மற்றும் கஃபேக்கள், அமைதியை விரும்புவர்களுக்கு ஆரோவில் நகரம் மற்றும் அரவிந்தர் ஆசிரமம், குடும்பங்களுக்கு பல வண்ண கடற்கரைகள், பார்க் மற்றும் மால், பெண்களுக்கு ஷாப்பிங் என அனைத்து வகையான சுற்றுலாப் பயணிகளையும் புதுச்சேரி இன்னும் கவர்கிறது. அதனால் தானோ என்னவோ, புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.



இந்தியாவிலேயே சிறந்த விருந்தோம்பல் செய்யும் பிராந்தியத்தில் புதுவை முதலிடம்

2023 ஆம் ஆண்டில் மறக்க முடியாத பயணத்திற்கு பயணிகள் மிகவும் வரவேற்கத்தக்க அனுபவங்களைப் பெறுவதற்கு உதவுவதற்காக, இது இந்தியாவில் மிகவும் வரவேற்கத்தக்க பகுதிகள் மற்றும் நகரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் முதல் 5 இடங்களை பிடித்த பிராந்தியங்களின் பட்டியல் கீழே:

o புதுச்சேரி

o கேரளா

o ராஜஸ்தான்

o கோவா

o ஹிமாச்சல பிரதேசம்